கபிலர்:
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் பிறந்தவர் கபிலர். குறிஞ்சிக் கவி பாடுவதில் வல்லவர்.
புலன் அழுகற்ற அந்தணன் என்று இவரைப் பாராட்டியவர் நப்பசலையார்.
நல்லிசை வாய்மொழிக் கபிலன் என்று நச்கீரரால் பாராட்டப்பெற்றவர்.
பாரி வள்ளலின் அவைப் புலவராகவும் கபிலர் திகழ்ந்தார்.
பரணர், இடைக்காயர், பாரி வள்ளல் ஆகியோரின் நண்பர் இவர்.
பாரி மகளிரை அழைத்துச் சென்று இருங்கோவேள், விச்சுவச்கோ ஆகிய , மன்னர்களிடம் அப்பெண்களை மணந்து கொள்ள
வேண்டியவர் கபிலர்.
வரலாற்றுச் செய்திகளை மிகுதியாக பாடிய பரணர் கபிலரின் நண்பர் ஆவார்.
கோவூர் கிழார்:
உறையூர் சோழருக்கும் (நெடுங்கிள்ளி) புகார் சோழருக்கும் (நலங்கிள்ளி) இடையில் போர் நிகழாமல் இருக்கத் தூது
சென்றவர் கோவூர் கிழார்.
மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளை கிள்ளி வளவன் யானைக்காலில் இட்டுக் கொல்ல முயன்றபோது தடுத்து
நிறுத்தியவர் இவர்.
சோறும் நீரும் இரு மருந்து என்று பாடியவர் கோவூர் கிழார்.
ஔவையார்:
ஔவை என்பதற்கு தாய் என்று பொருள் வழங்கப்படுகிறது.
அதியமானின் அவைப்புலவர் மற்றும் நண்பராகத் திகழ்ந்தவர்.
அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே தூது சென்றவர்.
நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும என்று நெல்லிக்கனி தந்தபோது அதியமானை
வாழ்த்தியவர் ஔவையார்.
இலக்கிய வரலாற்றில் ஐந்து ஔவையார்கள் உள்ளனர்.
1. சுட்ட கனி வேண்டுமா, சுடாத கனி வேண்டுமா என்று கேட்ட புராண ஔவையார்.
2. அதியமானைப் பாடிய புறநானூற்று ஔவையார்.
3. ஆத்திசூடி, கொன்றை வேந்தன் மூதுரை, நல்வழி போன்ற சிறுவர் நீதி நூல்களைப் பாடிய
சோழர் கால ஔவையார்.
4. தனிப்பாடல் திரட்டில் உள்ள சில பாடில்களை பாடிய இடைக்கால ஔவையார். இவர் பாரிமகளிர் அங்கவை, சங்கவை
என்பவர்களை மலையரசனான தெய்வீகன் என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தவர்.
5. ஔவை குறள், விநாயக அகவல் என்னும் நூல்களை பாத்யா ஔவையார்.
பிசிராந்தையார்:
பாண்டிய நாட்டுப் புலவரான இவர் தலைமுடி நரைக்காமல் இருக்ககக் காரணம் உரைத்தவர் ஆவார்.
கோப்பெருஞ்சோழனின் நண்பர் இவர். இருவரும் முகம் காணாமலே நட்பு கொண்டிருந்தனர்.
கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிலிருந்து உயிர் துறந்தவர் இவர்.
No comments:
Post a Comment